எனக்கான போராட்டத்தை அமைதியாக நடத்துகிறேன்: தீபிகா படுகோனே | விருஷபா ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் சூர்யா, வெங்கி அட்லூரி படப்பிடிப்பு | டில்லி முதல்வரை சந்தித்த காந்தாரா சாப்டர் 1 படக்குழு | இங்கிலாந்து பிரதமருடன் அமர்ந்து படம் பார்த்த ராணி முகர்ஜி | 'மெண்டல் மனதில்' என் மனதுக்கு மிக நெருக்கமான படம் : ஜிவி பிரகாஷ் | அடி உதை வாங்கினேன் : ஹீரோவான பூவையார் | ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் |
கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு, ஹிந்தியில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, தமிழில் சுல்தான் படத்தை அடுத்து விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. இரண்டு பாடல்களில் விஜய்யுடன் நடனமாடும் ஒரு கதாநாயகியாக மட்டுமே நடித்திருந்தார். இது விமர்சிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அதுகுறித்து அவர் கூறுகையில், வாரிசு படத்தின் கதையைக் கேட்டபோது இரண்டு பாடல்களை தவிர பெரிதாக எனக்கு படத்தில் முக்கியத்துவம் இல்லை என்பது தெரியும். அது தெரிந்தும் நான் அந்த படத்தை ஒப்புக்கொண்டதற்கு முக்கிய காரணம் விஜய் தான். அவரை நீண்ட காலமாக ஒரு ரசிகையாக நான் ரசித்து வந்திருக்கிறேன். அதனால் அவருடன் எப்படியாவது நடிக்க வேண்டும் என்ற ஒரு ஆசை இருந்து வந்தது. அதன் காரணமாகவே வாரிசு படத்தை விடுவதற்கு எனக்கு மனசு வரவில்லை. எப்படியாவது விஜய்க்கு ஜோடியாக நடித்து விட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் வாரிசு படத்தை ஏற்றுக் கொண்டேன். அதோடு நான் ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் அந்த ஹீரோக்களிடம் இருந்து ஏதாவது ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். அந்த அடிப்படையில்தான் வாரிசு படத்தில் நான் நடித்தேன். எனக்கு கூடுதல் முக்கியத்துவம் இல்லை என்றாலும் விஜய்யுடன் நடித்ததால் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் ராஷ்மிகா .