ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்து வரும் படம் சந்திரமுகி 2 . சந்திரமுகி படத்தில் ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. இதில் முதல் பாகத்தில் ஜோதிகா நடித்த வேடத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். தலைவி படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில் இந்த படத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் நடித்து வருகிறார் கங்கனா.
சமீபகாலமாக அரசியல் மற்றும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து அவ்வப்போது கருத்து சொல்லி வருவதால் அவர் சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டு வருகிறார். இதன் காரணமாக அவுட்டோர் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக சந்திரமுகி -2 படப்பிடிப்பு தளத்திற்கு தனது மேக்கப் மேன்கள், காஸ்டியூமர்கள் மட்டுமின்றி துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் நான்கு பேர் அடங்கிய செக்யூரிட்டியுடன் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து செல்கிறார் கங்கனா. இதனால் அவர் சந்திரமுகி-2 படப்பிடிப்பு தளத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் பரபரப்பு நிலவிக் கொண்டிருக்கிறது.