மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்து வரும் படம் சந்திரமுகி 2 . சந்திரமுகி படத்தில் ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. இதில் முதல் பாகத்தில் ஜோதிகா நடித்த வேடத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். தலைவி படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில் இந்த படத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் நடித்து வருகிறார் கங்கனா.
சமீபகாலமாக அரசியல் மற்றும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து அவ்வப்போது கருத்து சொல்லி வருவதால் அவர் சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டு வருகிறார். இதன் காரணமாக அவுட்டோர் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக சந்திரமுகி -2 படப்பிடிப்பு தளத்திற்கு தனது மேக்கப் மேன்கள், காஸ்டியூமர்கள் மட்டுமின்றி துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் நான்கு பேர் அடங்கிய செக்யூரிட்டியுடன் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து செல்கிறார் கங்கனா. இதனால் அவர் சந்திரமுகி-2 படப்பிடிப்பு தளத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் பரபரப்பு நிலவிக் கொண்டிருக்கிறது.