சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
சின்னத்திரை பிரபலமான ப்ரியதர்ஷினி நீண்ட நாட்களுக்கு பிறகு சமீபத்தில் தான் தொலைக்காட்சி சீரியல்களில் ரீ-என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். தற்போது அவர் 'எதிர்நீச்சல்' தொடரில் ரேணுகா என்ற கதாபாத்திரத்திலும், விஜய் டிவியின் 'நம்ம வீட்டு பொண்ணு' தொடரில் செல்வி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். அவர் நடிப்பில், மக்களுக்கு மிகவும் பிடித்தமான கதாபாத்திரம் ரேணுகா கதாபாத்திரம் தான். சொல்லப்போனால் ப்ரியதர்ஷினி 'நம்ம வீட்டு பொண்ணு' தொடரில் நடிப்பது கூட அவரது ரசிகர்கள் பலருக்கும் தெரியாது.
இந்நிலையில், ப்ரியதர்ஷினிக்கு பதில் பானுமதி என்ற புதிய நடிகை நடிக்க உள்ளதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் சிலர் 'எதிர்நீச்சல்' தொடரிலிருந்து தான் ப்ரியதர்ஷினி விலகிவிட்டார் என அப்செட்டாகினர். ஆனால், ப்ரியதர்ஷினி எதிர்நீச்சல் தொடரிலிருந்து விலகவில்லை. விஜய் டிவியின் 'நம்ம வீட்டு பொண்ணு' தொடரில் நடித்து வந்த செல்வி கதாபாத்திரத்திலிருந்து தான் விலகியுள்ளார். தற்போது அந்த செல்வி கதாபாத்திரத்தில் தான் பானுமதி நடிக்க உள்ளார். இந்த உண்மையை தெரிந்து கொண்ட ரசிகர்கள் நிம்மதியடைந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.