புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 |
பிக்பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக 86 நாட்களை கடந்துவிட்ட நிலையில், கடந்தவார எவிக்சனில் மணிகண்டன் வெளியேற்றப்பட்டுள்ளார். 4 முறை கேப்டனாகவும், கேம்களில் சிறப்பாகவும் விளையாடி வந்த மணிகண்டன், இந்த வாரம் நடைபெற்று வரும் 'டிக்கெட் டூ பினாலே' டாஸ்க்கிலும் நிச்சயம் ஜெயித்து பைனல் வரை செல்வார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் மணிகண்டன் வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அவர் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'பிக்பாஸ் பயணம் மறக்க முடியாதது. என்றும் என் நினைவில் இருக்கும். வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்த பிக்பாஸ் குழு, ஸ்டார் விஜய், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது விலைமதிப்பற்ற அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்த ரசிகர்களுக்கும் நன்றி. அவர்கள் அளித்த ஆதரவு எனக்கு மிகவும் ஊக்கம் அளித்திருக்கிறது. அதிக உயரத்தை அடைய என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன்' என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து மணிகண்டனின் எதிர்காலம் சிறப்பாக அமைய ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.