திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
ரா.வெங்கட் இயக்கி உள்ள படம் ‛கிடா'. இந்த படம் சமீபத்தில் சென்னையில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் முதல் இடம் பிடித்து விருதினை பெற்றது. இதில் சில மாதங்களுக்கு முன் மரணம் அடைந்த ‛பூ' ராமு கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் காளி வெங்கட், பாண்டியம்மா, கமலி, லோகி, மாஸ்டர் தீபன் நடித்திருக்கிறார்கள். எம்.ஜெயபிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், தீசன் இசை அமைத்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ரா.வெங்கட் கூறியதாவது: இந்த படம் விருதுக்காக எடுக்கப்பட்டதல்ல. தியேட்டருக்கு வருவதற்கு சற்று தாமதம் ஆனதால் பெஸ்டிவலுக்கு அனுப்பி வைத்தோம். அது அனைவராலும் பாராட்டப்பட்டு விருதுகளை குவித்தது. கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது படத்தை பார்த்த அனைவரும் அதில் நடித்திருந்த ‛பூ' ராமு பற்றி விசாரித்தார்கள். அவருக்கு கட்டாயம் தேசிய விருது கிடைக்கும் என்றார்கள். சென்னை திரைப்பட விழாவிலும் அதையே சொன்னார்கள். நாங்களும் படத்தை தேசிய விருதுக்கு அனுப்ப இருக்கிறோம். பூ ராமுக்கு விருது கொடுத்து கவுரவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
தீபாவளிக்கு புதுச்சட்டை கேட்கிறான் பேரன். ஏழை தாத்தாவால் அதை வாங்கி கொடுக்கிற அளவிற்கு பணமில்லை. அதனால் தனது ஆட்டை அவர் கசாப்பு கடை காரனுக்கு விற்கிறார். அந்த ஆட்டை நேசிக்கும் பேரன் எனக்கு சட்டையே வேண்டாம் ஆடுதான் வேண்டும் என்கிறான். இந்த நிலையில் ஆடு திருடு போகிறது. அந்த ஆடு இவர்களிடம் வந்து சேர்ந்ததா என்பதுதான் படத்தின் கதை. என்றார்.