பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. தற்போது தனது முதல் படமான டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் அருள்நிதியை நாயகனாக வைத்து இயக்கி வருகிறார். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் டிமான்டி காலனி 2 படம் குறித்து அஜய் ஞானமுத்து வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த படப்பிடிப்பில் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் படமாக்கப்பட்டு அனைத்து காட்சிகளுமே தனக்கு திருப்தியாக இருப்பதாக தெரிவித்திருப்பவர், படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். டிமான்டி காலனி படத்தின் முதல் பாகத்தைப்ப்போலவே இந்த இரண்டாம் பாகமும் திரில்லர் கதையில் உருவாகி வருகிறது.