நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
விஜய்சேதுபதியின் பரம ரசிகரான புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன் இதற்கு முன்பு ஹூயூமன், கலைஞன் என்ற தலைப்பின் கீழ் விஜய்சேதுபதி காலண்டரை வெளியிட்டார். இதற்காக தனியாக விஜய்சேதுபதியை வைத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த ஆண்டு 'தி ஆர்ட்டிஸ்' என்ற பெயரில் காலண்டரை உருவாக்கி உள்ளார்.
இந்த காலண்டருக்கு ஓவியர் சிற்பி ஓவியம் தீட்டி உள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் சுமார் பத்து நாட்களுக்கும் மேலாக 12 செட்டுகளை, ஒவ்வொன்றையும் தனித்துவமான வடிவமைத்துள்ளனர். இது குறித்து புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன் கூறும்போது “கலையும் கற்பனையும், பல சமூக மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது; பல முன்னெடுப்புகளுக்கு ஆதாரமாய் இருந்துள்ளது; பலரையும் மகிழ்வித்து வருகிறது; அவ்வாறான எல்லா கலைஞர்களுக்கும் இந்த ஆர்டிஸ்ட் சமர்ப்பணம். பணிச்சுமைகளுக்கு மத்தியிலும் இதற்காக நேரம் கொடுத்த விஜய் சேதுபதிக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தன்னுடைய பணிகளில் முழு அர்ப்பணிப்புடனும் தன்னம்பிக்கையுடனும் செயலாற்றும் நடிகர்களில் விஜய் சேதுபதிக்கு என்றுமே ஒரு தனி இடம் உண்டு. இந்த படத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு தலைப்பிற்கும், அந்தந்த துறை சார்ந்த நிபுணர்களை அணுகி, அதன் நுணுக்கங்களை உள்வாங்கி, அந்தந்த கதாபாத்திரமாகவே தன்னை மாற்றியிருக்கிறார். இதன் மூலம் கிடைக்கும் பணம் காசா அறக்கட்டளை மூலம் கல்வி மற்றும் மருத்துவ நலன்களுக்காக பயன்படுத்தப்படும்” என்கிறார்.