ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள காபா என்கிற திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ளார். கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மலையாள திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு நிதி திரட்டும் விதமாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் மஞ்சுவாரியர் தான். அவரை மனதில் வைத்துதான் நாயகி கதாபாத்திரம் எழுதப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அவரால் இந்தப் படத்தில் நடிக்க இயலாமல் போனது.
அதைத் தொடர்ந்து அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் கதாநாயகியாக நுழைந்தார். சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நாயகி அபர்ணா பாலமுரளி பேசும்போது, “நான் ஒரு ரசிகையாக மாறிய தருணம் இது. சில காரணங்களால் மஞ்சு சேச்சி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போனது. ஆனால் நான் இந்த கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதை மகிழ்ச்சியாகவும் அதேசமயம் பெருமையாகவும் உணர்கிறேன்” என்று கூறினார்.