பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் விஷால் அதன்பிறகு சென்னையில் உள்ள ஆர்.கே. நகரில் நடை நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுவில் தவறு உள்ளதாக கூறி அதை தேர்தல் அதிகாரிகள் ஏற்க மறுத்தார்கள்.
அதன் பிறகு ஆந்திரா மாநிலத்தில் உள்ள குப்பம் தொகுதியில் அங்குள்ள முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக விஷால் தேர்தலில் போட்டியிடப்போவதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து ஒரு செய்தி வெளியிட்டார் விஷால். அதோடு திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே தனது கவனம் இருப்பதாகவும் அப்போது குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தன்னை சந்திக்க வருமாறு விஷாலுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அவர்களின் சந்திப்பு டிசம்பர் 27ம் தேதி நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை அடுத்து 2024 தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் சார்பில் ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரில் விஷால் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக சோசியல் மீடியாக்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும் தற்போது ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரவையில் நடிகை ரோஜா அமைச்சராக அங்கம் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.