புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
சமீபத்தில், சமந்தா நடித்த 'யசோதா' படம், ஐந்து மொழிகளில் வெளியானது. அடுத்து, 'சாகுந்தலம்' படம் வெளியாக உள்ளது. விஜய் தேவரகொண்டாவுடன், 'குஷி' என்ற படத்திலும் சமந்தா நடித்து வருகிறார். இதனிடையே, 'மயோசிடிஸ்' என்ற அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உள்ள சமந்தா, 'யசோதா' பட 'டப்பிங்'கின் போதே சிகிச்சை பெறத் துவங்கினார். தொடர் சிகிச்சையில் சமந்தா தேறி வந்தாலும், படப்பிடிப்பில் பங்கேற்காமல் இருந்தார்.
இந்நிலையில், நோயின் தீவிரத்தைத் தொடர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி, உயர்ரக சிகிச்சைக்காக சமந்தா, தென்கொரியா நாட்டிற்கு செல்ல திட்டமிட்டு உள்ளார். இதனால், நடிப்புக்கு நீண்ட காலம் ஓய்வு கொடுக்க, சமந்தா திட்டமிட்டு உள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும், சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.