ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் | பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் |
தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் பின்னணி பாடி வருபவர் கே.எஸ் .சித்ரா. விஜய சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்ட சித்ராவுக்கு நந்தனா என்ற ஒரு மகள் இருந்தார். கடந்த 2011ம் ஆண்டு ஒரு இசை நிகழ்ச்சிக்காக துபாய் நாட்டுக்கு சென்று இருந்த போது அங்குள்ள நீச்சல் குளம் ஒன்றில் தவறி விழுந்து நந்தனா இறந்து விட்டார்.
இந்நிலையில் டிசம்பர் 18ம் தேதியான இன்று மகளின் பிறந்த நாள் என்பதால் தனது சோசியல் மீடியாவில் ஒரு நெகிழ்ச்சியான பதிவு போட்டிருக்கிறார் பாடகி சித்ரா. அந்த பதிவில், சொர்க்கத்தில் தேவதைகளுடன் பிறந்தநாள் கொண்டாடும் உனக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லா இடத்திலும் அன்பு செலுத்தும் உனக்கு வயது அதிகம் ஆகாது. நீ பாதுகாப்பாக இருக்கிறாய் என்று எனக்கு தெரியும். உன்னை மிகவும் மிஸ் பண்ணுகிறேன் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.