இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் பின்னணி பாடி வருபவர் கே.எஸ் .சித்ரா. விஜய சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்ட சித்ராவுக்கு நந்தனா என்ற ஒரு மகள் இருந்தார். கடந்த 2011ம் ஆண்டு ஒரு இசை நிகழ்ச்சிக்காக துபாய் நாட்டுக்கு சென்று இருந்த போது அங்குள்ள நீச்சல் குளம் ஒன்றில் தவறி விழுந்து நந்தனா இறந்து விட்டார்.
இந்நிலையில் டிசம்பர் 18ம் தேதியான இன்று மகளின் பிறந்த நாள் என்பதால் தனது சோசியல் மீடியாவில் ஒரு நெகிழ்ச்சியான பதிவு போட்டிருக்கிறார் பாடகி சித்ரா. அந்த பதிவில், சொர்க்கத்தில் தேவதைகளுடன் பிறந்தநாள் கொண்டாடும் உனக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லா இடத்திலும் அன்பு செலுத்தும் உனக்கு வயது அதிகம் ஆகாது. நீ பாதுகாப்பாக இருக்கிறாய் என்று எனக்கு தெரியும். உன்னை மிகவும் மிஸ் பண்ணுகிறேன் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.