நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
கடப்பா : திருப்பதிக்கு மகள் ஐஸ்வர்யா உடன் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்த நடிகர் ரஜினிகாந்த், பின்னர் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உடன் கடப்பாவில் உள்ள அமீன் தர்காவிற்கு சென்று வழிபாடு செய்தார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ‛ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. இருதினங்களுக்கு முன் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடிய ரஜினி, நேற்று இரவு திருப்பதி சென்றார். அங்கு டி.எஸ்.ஆர் விருந்தினர் மாளிகையில் தங்கினார். தொடர்ந்து இன்று(டிச., 15) அதிகாலை சுப்ரபாத சேவையில் திருப்பதி ஏழுமலையானை மகள் ஐஸ்வர்யா உடன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் மதியம் 12மணியளவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள புகழ்பெற்ற அமீன் தர்காவிற்கு சென்றார் ரஜினி. அவருடன் மகள் ஐஸ்வர்யாவும் உடன் சென்றார். அங்கு தர்கா நடவடிக்கைகளை கேட்டு அறிந்து கொண்டவர் பின்னர் நடந்த பிரார்த்தனையிலும் பங்கேற்றார். ரஜினி, ரஹ்மான் வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.