ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

விஜய்யின் தந்தையும் முன்னணி இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது படங்களில் நடித்தும் வருகிறார். அவர் கதையின் நாயகனாக டிராபிக் ராமசாமி என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை வழங்குவதாக கூறி மலேசியாவைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியரான பிரம்மானந்தம் சுப்பிரமணியம் என்பவரிடம் இருந்து 21 லட்சம் ரூபாய் பெற்றிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
பின்னர் அந்த படத்தை தானே வெளியிட்டதாகவும் அதற்காக பெற்ற 21 லட்சம் ரூபாய் பணத்தைத் திரும்பித் தராமலும் எஸ்.ஏ.சந்திரசேகர் மோசடி செய்துவிட்டதாகக் கூறி பாதிக்கப்பட்ட பிரம்மானந்தம் சுப்பிரமணியம் சார்பில் மணிமாறன் என்பவர் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வாங்கிய 21 லட்ச ரூபாய் பணத்தை வட்டியுடன் சேர்த்து 27 லட்சம் ரூபாயை பிரம்மானந்தம் சுப்பிரமணியத்திற்கு வழங்க உத்தரவிட்டது. ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகர் பணத்தைக் கொடுக்காமல் தனக்கும் வெளிநாட்டு வாழ் நண்பரான பிரம்மானந்தம் சுப்பிரமணியத்திற்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக மணிமாறன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. இது தொடர்பாக விரைவில் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.