ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

உலகமே எதிர்பார்த்து காத்துக்கிடக்கும் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் நாளை வெளிவருகிறது. பல நாடுகளில் பிரிமியர் ஷோ, ஸ்பெஷல் ஷோ என இப்போதே களைகட்ட ஆரம்பித்து விட்டது. கடந்த வாரமே முன்பதிவுகள் தொடங்கி விட்டது.
இந்த நிலையில் படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான ஜேம்ஸ் கேமரூனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கலந்து கொள்வதாக இருந்த பிரிமியர் ஷோ உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க முடியவில்லை.
இதுகுறித்து கூறிய அவர் கூறும்போது “ஜப்பான் புரமோசன் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு டோக்கியோவில் இருந்து அமெரிக்கா திரும்பியபோது கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. நான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டேன். பல ஆண்டுகளாக பல நண்பர்களிடம் பிரியமியர் ஷோவில் சந்திப்போம் என்ற கூறியிருந்தேன். இப்போது அது நடக்காமல் போய்விட்டது. நாம் ஒன்று நினைத்தால் கடவுள் ஒன்று நினைக்கிறார்” என்கிறார் ஜேம்ஸ் கேமரூன்.