மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
உலகமே எதிர்பார்த்து காத்துக்கிடக்கும் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் நாளை வெளிவருகிறது. பல நாடுகளில் பிரிமியர் ஷோ, ஸ்பெஷல் ஷோ என இப்போதே களைகட்ட ஆரம்பித்து விட்டது. கடந்த வாரமே முன்பதிவுகள் தொடங்கி விட்டது.
இந்த நிலையில் படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான ஜேம்ஸ் கேமரூனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கலந்து கொள்வதாக இருந்த பிரிமியர் ஷோ உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க முடியவில்லை.
இதுகுறித்து கூறிய அவர் கூறும்போது “ஜப்பான் புரமோசன் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு டோக்கியோவில் இருந்து அமெரிக்கா திரும்பியபோது கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. நான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டேன். பல ஆண்டுகளாக பல நண்பர்களிடம் பிரியமியர் ஷோவில் சந்திப்போம் என்ற கூறியிருந்தேன். இப்போது அது நடக்காமல் போய்விட்டது. நாம் ஒன்று நினைத்தால் கடவுள் ஒன்று நினைக்கிறார்” என்கிறார் ஜேம்ஸ் கேமரூன்.