பிளாஷ்பேக் : குழந்தையாக வந்தார், சிறுமியாக மறைந்தார் : மின்னி மறைந்த ஷோபா வாழ்க்கை | கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி | கவியூர் பொன்னம்மாவின் மறைவும் மஞ்சு வாரியரின் நிறைவேறாத ஆசையும் | செப்டம்பர் 27ல் நான்கு முனைப் போட்டி | 'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி | பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? |
'வாரிசு' படத்தைத் தெலுங்கில் 'வாரிசுடு' என்ற பெயரில் டப்பிங் செய்து நேரடிப் படங்களுக்கு இணையாக வெளியிடுவது குறித்த சர்ச்சை கடந்த சில வாரங்களாகவே இருந்து வருகிறது. தெலுங்கு, தமிழ்த் திரைப்பட சங்கங்கள் இது குறித்து பேசி தீர்த்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், விசாகப்பட்டிணம் திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் மீண்டும் இந்த சர்ச்சையைக் கையில் எடுத்துள்ளது.
நேற்று அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பண்டிகை நாட்களில் நேரடி தெலுங்குப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என சங்கம் விவாதித்துள்ளது. இம்மாதிரியான பண்டிகை நாட்களில் தெலுங்குப் படங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தியேட்டர்காரர்களைக் கேட்டுக் கொள்கிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
'வாரிசு' படத்தைத் தயாரித்துள்ள தில் ராஜு, தெலுங்குத் திரையுலகத்தில் மிகப் பெரிய வினியோகஸ்தர், தியேட்டர் வட்டாரங்களில் அதிக நெருக்கம் உடையவர். பல மாதங்களுக்கு முன்பே அவர் 'வாரிசு' படத்தைத் தெலுங்கில் வெளியிடுவதற்காக ஒப்பந்தம் செய்துவிட்டாராம். அதனால், நேரடித் தெலுங்குப் படங்களுக்கு முக்கிய தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது என்கிறார்கள்.
பிரச்சினை முடிந்ததாக சொல்லப்பட்ட நிலையில் மீண்டும் இந்த விவகாரம் ஆரம்பமாகியுள்ளது. இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இதில் பல திருப்பங்கள் ஏற்படலாம்.