லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது, இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஐஸ்வர்ய லட்சுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதற்கு முன்னதாக அவர் நடித்த பொன்னியின் செல்வன் படத்தின் பூங்குழலி கதாபாத்திரத்திற்கு அடுத்ததாக இந்தப் படத்தில் அவர் நடித்துள்ள மல்யுத்த வீராங்கனை கதாபாத்திரம் இன்னும் அதிக வரவேற்பை அவருக்கு தேடி தந்துள்ளது. இந்தநிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, சிறுவயதில் பாலியல் சீண்டலுக்கு தானும் ஆளானதாக ஒரு அதிர்ச்சி தகவலை கூறினார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒரு சமயத்தில் தவறான தொடுதலை அவரது வாழ்க்கையில் சந்தித்து இருப்பார் என்று தான் நினைக்கிறேன். இப்போதும் கூட அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எனக்கும் என்னுடைய சிறுவயதில் குருவாயூரில் அதுபோன்று ஒரு கசப்பான நிகழ்வு நடந்தது. அன்றைய தினம் நான் மஞ்சள் நிறத்தில் ஸ்ட்ராபெரி டிசைன் செய்யப்பட்டிருந்த பிராக் ஒன்றை அணிந்திருந்தது இப்போதும் என் ஞாபகத்தில் இருக்கிறது. அந்த சமயத்தில் அந்த நிகழ்வுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றுகூட தெரியவில்லை.
அந்த நிகழ்வுக்கு பிறகு, மஞ்சள் நிறத்தில் உடை அணிந்தாலே, இதுபோன்று ஏதாவது சங்கடங்கள் வந்து விடுமோ என்று பல நாட்களாக பயந்தது உண்டு. ஆனாலும் அந்த பயத்தில் இருந்து மீண்டு வந்து விட்டேன். இப்போது அதிக அளவில் மஞ்சள் உடை தான் அணிகிறேன். கார்கி படத்தில் கூட இந்த விஷயம் தான் விவாதிக்கப்பட்டு இருந்தது. இதுபோன்ற விஷயங்களை சினிமாவில் விவாதிப்பதற்கு முன் வரவேண்டும்” என்று கூறியுள்ளார்.