பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கன்னடத்தில் வெளிவந்து மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு 400 கோடியை வசூலித்த படம் 'காந்தாரா'. இப்படம் சில தினங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது. தியேட்டர்களில் படத்தைப் பார்க்காதவர்கள் தற்போது ஓடிடி தளத்தில் படத்தைப் பார்த்து தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.
'காந்தாரா' படம் வெளியான அதே தினத்தில் தமிழில் வெளிவந்து 500 கோடிக்கும் அதிக வசூலைக் குவித்த படம் 'பொன்னியின் செல்வன்'. அப்படத்தின் கதாநாயகியாக திரிஷா தற்போதுதான் 'காந்தாரா' படத்தைப் பார்த்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் 'வராஹரூபம்' பாடல் காட்சியைப் பதிவு செய்து 'ப்ப்ப்ப்ப்பா……தலை வணங்குகிறேன்' என படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி, கதாநாயகி சப்தமி கவுடா, கிஷோர், மானஸி சுதிர் ஆகியோரை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
ஓடிடியில் வெளியான பின்னும் 'காந்தாரா' படம் தியேட்டர்களில் இன்னமும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.