'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் படங்களுக்கு பிறகு சூர்யா நடித்து வரும் படம் வணங்கான். இந்த படத்தில் கிர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்து வருகிறார். மீனவர்கள் பிரச்னையை கதைக்களமாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் சூர்யா மாற்றுத்திறனாளியாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு தாமதம் ஆகி வந்தது.
இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கும் தனது 42வது படத்தில் நடிக்க தொடங்கினார் சூர்யா. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்ற நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு தொடங்க காலதாமதம் ஆகும் என்பதால் தற்போது மீண்டும் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்து துவங்கும் படப்பிடிப்பை ஒரேக்கட்டமாக முடிக்க பாலா - சூர்யா இருவரும் திட்டமிட்டுள்ளனர்.