சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

நடிகர் கவுதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் தங்களது காதலை வெளிப்படுத்திய நிலையில் வருகிற 28ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளனர். இதையொட்டி சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்களை இருவரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கவுதம் கூறுகையில், "தேவராட்டம் படத்தில் நடித்த போது நண்பர்களாக இருந்தோம். அதன் பிறகு எங்களுக்குள் காதல் வந்தது.
நான்தான் முதலில் காதலை சொன்னேன். காதலை சொல்லிவிட்டு இரண்டு நாட்கள் பயந்து கொண்டே இருந்தேன். வீட்டில் சொன்ன போது ஏற்றுக் கொண்டனர். மஞ்சிமா என்னை நன்றாகப் பார்த்துக் கொள்வார், என்னை நல்லவனாக மாற்றி விட்டார் என்று அப்பா சொன்னார். இரு வீட்டார் சம்மதத்துடன் எங்களது திருமணம் வருகிற 28ஆம் தேதி நெருங்கிய குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்ள நடக்கிறது.
உங்கள் அனைவரின் வாழ்த்தும் தேவை. தேனிலவு பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. தற்போது சிம்புவுடன் பத்து தல படத்தில் நடிக்கிறேன். என் திருமண செய்தி கேட்டு சிம்பு வாழ்த்தினார்" என்றார்.
நடிகை மஞ்சிமா மோகன் பேசும்போது: உங்கள் அனைவரின் வாழ்த்தும் தேவை. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்றார்.