எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
நடிகர் கவுதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் தங்களது காதலை வெளிப்படுத்திய நிலையில் வருகிற 28ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளனர். இதையொட்டி சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்களை இருவரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கவுதம் கூறுகையில், "தேவராட்டம் படத்தில் நடித்த போது நண்பர்களாக இருந்தோம். அதன் பிறகு எங்களுக்குள் காதல் வந்தது.
நான்தான் முதலில் காதலை சொன்னேன். காதலை சொல்லிவிட்டு இரண்டு நாட்கள் பயந்து கொண்டே இருந்தேன். வீட்டில் சொன்ன போது ஏற்றுக் கொண்டனர். மஞ்சிமா என்னை நன்றாகப் பார்த்துக் கொள்வார், என்னை நல்லவனாக மாற்றி விட்டார் என்று அப்பா சொன்னார். இரு வீட்டார் சம்மதத்துடன் எங்களது திருமணம் வருகிற 28ஆம் தேதி நெருங்கிய குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்ள நடக்கிறது.
உங்கள் அனைவரின் வாழ்த்தும் தேவை. தேனிலவு பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. தற்போது சிம்புவுடன் பத்து தல படத்தில் நடிக்கிறேன். என் திருமண செய்தி கேட்டு சிம்பு வாழ்த்தினார்" என்றார்.
நடிகை மஞ்சிமா மோகன் பேசும்போது: உங்கள் அனைவரின் வாழ்த்தும் தேவை. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்றார்.