படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
நடிகர் கவுதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் தங்களது காதலை வெளிப்படுத்திய நிலையில் வருகிற 28ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளனர். இதையொட்டி சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்களை இருவரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கவுதம் கூறுகையில், "தேவராட்டம் படத்தில் நடித்த போது நண்பர்களாக இருந்தோம். அதன் பிறகு எங்களுக்குள் காதல் வந்தது.
நான்தான் முதலில் காதலை சொன்னேன். காதலை சொல்லிவிட்டு இரண்டு நாட்கள் பயந்து கொண்டே இருந்தேன். வீட்டில் சொன்ன போது ஏற்றுக் கொண்டனர். மஞ்சிமா என்னை நன்றாகப் பார்த்துக் கொள்வார், என்னை நல்லவனாக மாற்றி விட்டார் என்று அப்பா சொன்னார். இரு வீட்டார் சம்மதத்துடன் எங்களது திருமணம் வருகிற 28ஆம் தேதி நெருங்கிய குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்ள நடக்கிறது.
உங்கள் அனைவரின் வாழ்த்தும் தேவை. தேனிலவு பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. தற்போது சிம்புவுடன் பத்து தல படத்தில் நடிக்கிறேன். என் திருமண செய்தி கேட்டு சிம்பு வாழ்த்தினார்" என்றார்.
நடிகை மஞ்சிமா மோகன் பேசும்போது: உங்கள் அனைவரின் வாழ்த்தும் தேவை. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்றார்.