பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை |
நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் ‛வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வரும் பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 20ம் தேதி சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்றார்.
இந்த நிகழ்ச்சிக்காக நடிகர் விஜய் வந்த காரின் கண்ணாடியில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிய காரணத்திற்காக அவருக்கு போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பனையூரில் ரசிகர்களை சந்தித்த பிறகு புறப்பட்ட விஜய்யின் காரை ரசிகர்கள் பலரும் பின்தொடர்ந்து வீடியோ எடுத்தனர். அப்போது காரில் சென்ற வீடியோ வெளியாகி வைரலான நிலையில், விஜய் கார் கண்ணாடியில் கருப்பு கலர் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது பற்றி பலரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் உடனடியாக விஜய் பெயரில் வழக்குப்பதிவு செய்து ரூ.500 அபாராதம் விதித்து சென்னை போக்குவரத்து போலீஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.