பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” | ஜோதிடத்தை நம்பி படத்தை போட்ட வம்பு நடிகர் | கதை கேட்காமல் நடித்தேன்: 'சர்ப்ரைஸ்' தரும் சாயாதேவி | கந்தன் கருணை, ஆழ்வார், சர்கார் - ஞாயிறு திரைப்படங்கள் | தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் |
கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் 'தேவராட்டம்' படத்தில் நடித்தபோது காதலில் விழுந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்தக் காதல் வெளியில் தெரிந்ததும் பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் சாக்கில் காதலை அறிவித்தனர். வருகிற 28ம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமணம் நடக்க இருக்கிறது. இதில் அவர்களின் உறவினர்கள் மட்டும் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில், மஞ்சிமா மோகன் இன்ஸ்டாகிராமில் உள்ள தனது படங்கள் அனைத்தையும் நீக்கி உள்ளார். அவரும் கவுதம் கார்த்திக்கும் இணைந்திருக்கும் இரண்டு படங்களும், மஞ்சிமா பூனையை கையில் வைத்திருக்கும் ஒரு படமும் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அவர் நீக்கிய படங்களில் அவர் நடித்த முந்தைய படங்களின் காட்சிகள், மற்ற நடிகர், நடிகைளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட செல்பிகள் இருந்தன.
திருமணத்திற்கு பிறகு அவர் திரைப்படம் மற்றும் சமூக வலைத்தளங்களில் முற்றிலும் விலக இருப்பதையே இது காட்டுகிறது என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். இதற்கு பதலிளித்துள்ள மஞ்சிமா "இன்ஸ்டாகிராம் மக்களுடன் இணைந்திருப்பதற்கு ஏற்ற எளிய அழகான தளம். அது எந்த அளவிற்கு அழகானதோ, ஆபத்தானதோ என்று கவலையில்லை. என்னுடைய பழைய புகைப்படங்களை இன்ஸ்டாவில் இருந்து தவிர்க்கிறேன். நான் மீண்டும் எல்லாவற்றையும் தொடங்குவேன்" என்கிறார் மஞ்சிமா.