மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
‛சண்டிவீரன்' படத்தை அடுத்து நடிகர் அதர்வா, இயக்குனர் சற்குணம் கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‛பட்டத்து அரசன்'. ஆஷிகா ரங்கநாத் நாயகியாக நடிக்க, ராஜ்கிரண், ராதிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். சமீபத்தில் இதன் முதல்பார்வை வெளியிடப்பட்டது. கிராமத்து கதையில் உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்கு தயாராகி வந்தது. இந்நிலையில் தற்போது இந்த படம் சென்சார் சான்றே பெற்றுவிட்டது. படத்திற்கு சென்சாரில் யு சான்று கிடைத்துள்ளதாகவும், நவ., 25ல் படம் திரைக்கு வருவதாகவும் படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.