துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிப்பில் இந்த ஆண்டில் வெளிவந்து 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்த படம் 'ஆர்ஆர்ஆர்'.
இப்படத்திற்கு எப்படியும் ஆஸ்கர் விருதுகளை வாங்க வேண்டும் என படத்தை அமெரிக்காவில் திரையிட்டு, அங்கு அதற்கான புரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார் ராஜமவுலி. இடையில் ஜப்பான் நாட்டிற்கும் சென்று அங்கு நடந்த பட வெளியீட்டு நிகழ்வுகளில் பங்கு கொண்டுவிட்டு மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கு சிகாகோவில் நடந்த ஒரு நிகழ்வில் பேசுகையில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். படத்திற்கான கதை விவாதம் நடந்து வருவதாகக் கூறியுள்ளார். கதை எழுதும் பணியில் தனது அப்பா விஜயேந்திர பிரசாத் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
'பாகுபலி 2'ம் பாகம் முதல் பாகத்தை விட அதிகம் வசூலித்தது. எனவே, 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை விடவும் பிரம்மாண்டமாக உருவாக்கி இரு மடங்கு வசூலைப் பெறவும் வாய்ப்புள்ளது.