துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தமிழ், தெலுங்கில் தனி கதாநாயகிகளாக ஒரு சில நடிகைகள்தான் நடித்து வருகிறார்கள். அதிலும் சில முன்னணி நடிகைகளுக்கு மட்டும்தான் வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைக்கிறது. தமிழில் தனி கதாநாயகியாக நடித்தாலும் முன்னணியில் இருப்பவர் நயன்தாரா. தெலுங்கில் அப்படி தனி கதாநாயகிகளின் படங்கள் அதிகம் வருவதில்லை.
சமந்தா நடித்து தெலுங்கில் தயாரான 'யசோதா' படம் தமிழிலும் டப்பிங் ஆகி இரண்டு தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. புதிய கதைக்களம், சமந்தா கதாபாத்திரத்தின் சஸ்பென்ஸ், அவரது நடிப்பு என படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ள ஒரு படமாக அமைந்துவிட்டது. தமிழகத்தில் மழை காரணமாக வசூல் பாதிக்கப்பட்டாலும் விமர்சனங்கள் பாசிட்டிவ்வாக வந்துள்ளன. அதே சமயம், ஆந்திரா, தெலுங்கானாவில் படம் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபீசில் படம் வெற்றி பெற்றுவிடும் என்று பேசிக் கொள்கிறார்கள்.
சமந்தா தனி கதாநாயகியாக நடித்த முதல் படமான 'யு டர்ன்' தமிழ், தெலுங்கில் இரு மொழிப் படமாக வெளிவந்தாலும் தோல்வியைத் தழுவியது. அடுத்து அவர் தனி கதாநாயகியாக நடித்து வெளிவந்த தெலுங்குப் படமான 'ஓ பேபி' வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. மூன்று வருடங்களுக்குப் பிறகு சமந்தா மீண்டும் தனி கதாநாயகியாக நடித்து வெளிவந்துள்ள 'யசோதா' படமும் வெற்றிப் படமாக அமைய உள்ளது.