பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு, தான் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். இதை தொடர்ந்து ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் அவரிடம் நலம் விசாரித்து வருவதுடன் அவர் விரைவில் குணம்பெற பிரார்த்தித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் சமந்தா கதாநாயகியாக நடித்துள்ள யசோதா திரைப்படம் வரும் நவம்பர் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகர் உன்னி முகுந்தன். தமிழில் சீடன், பாகமதி ஆகிய படங்களில் நடித்தவர்.
யசோதா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பேட்டி ஒன்றில் உன்னிமுகுந்தன் கூறும்போது, “இந்த படத்தில் நான் ஏன் நடித்தேன் என்பது படம் பார்க்கும்போது உங்களுக்கு புரியும். அதனால் அதுபற்றி இப்போது அதிகம் பேச விரும்பவில்லை. சமந்தா இந்த படத்தில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் நடித்துள்ளார். படப்பிடிப்பில் என்னுடனும், படக்குழுவினருடனும் கலகலப்பாக சிரித்து பேசியபடி தான் இருப்பார். ஆனால் ஒருநாள் கூட நான் இப்படி ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக எந்த ஒரு கஷ்டத்தையும் அவர் வெளிக்காட்டியதே இல்லை. அதுபற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டதும் இல்லை. அந்த அளவிற்கு அவர் தொழிலையும் பர்சனல் விஷயங்களையும் தனித்தனியாக பிரித்து வைத்து இருந்தார்” என்று கூறியுள்ளார்.