ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த வருடம் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இது கன்னட திரையுலகம் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் அவர் மறைந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் அவருக்கு கர்நாடகாவின் மிகவும் உயர்ந்த விருதான கர்நாடக ரத்னா என்கிற விருது வழங்கும் விழா வரும் நவம்பர் 1ம் தேதி பெங்களூருவில் உள்ள விதான் சவுதாவில் நடக்க இருக்கிறது.
கர்நாடகாவில் இந்த வருடம் நடைபெறும் மிகப்பிரம்மாண்டமான விழாவாக இது இருக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். அதற்கேற்ப இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு தமிழ் திரையுலகில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் இருவக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இந்த விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து விட்டார்கள் என்றும் கர்நாடக நிதியமைச்சர் அசோகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “முதலில் இந்த விழாவிற்கு வருவதற்கு ரஜினிகாந்த் தயங்கினாலும் பின்னர் சமீபத்தில் அவர் இந்த விழாவிற்கு வருகை தர சம்மதம் தெரிவித்துவிட்டார். அவர் கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்து அங்கேயே அரசு பேருந்திலும் பணியாற்றியவர். அதுமட்டுமல்ல நடிகர் ராஜ்குமார் குடும்பத்தின் மீது மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர். அதேபோல நடிகர் ஜூனியர் என்டிஆரின் அம்மா கர்நாடகாவை சேர்ந்தவர். அதனால் இவர்கள் இருவருமே இந்த விழாவில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதில் ஆச்சர்யம் ஏதுமில்லை” என்று கூறியுள்ளார்.