சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு திரைப்படம் முதன் முதலில் ரூ.500 கோடியைத் தொடப் போகிறது என்பது ஒரு சரித்திரம். அந்த சாதனையை சரித்திரப் படமான 'பொன்னியின் செல்வன்' படம் அடுத்த சில நாட்களில் நிகழ்த்த உள்ளது. விரைவில் தயாரிப்பு நிறுவனமே படம் 500 கோடியைக் கடந்தது என்ற அறிவிப்பை வெளியிடலாம்.
கடந்த வாரம் 450 கோடி வசூலைக் கடந்ததாக அறிவித்திருந்தார்கள். அதற்குப் பிறகு தீபாவளி விடுமுறை நாட்களிலும் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது. தீபாவளிக்கு வெளியான இரண்டு படங்களுடனும் போட்டி போட்டு 'பொன்னியின் செல்வன்' படமும் நல்ல வசூலைப் பெற்று திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்த வார நாட்களிலும் பல தியேட்டர்களில் நல்ல முன்பதிவு நடைபெற்றுள்ளது.
படம் வெளியான மற்ற மொழிகளில் அதிக வசூலைப் பெறாமல் தமிழில் மட்டுமே 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற மொழிகளிலும் இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருந்தால் 1000 கோடி வசூலைத் தொட்டிருக்கும். ஆனால், படத்தை தமிழ் மன்னனின் வாழ்க்கை வரலாற்றுப் படம், அதை ஏன் நாம் பார்க்க வேண்டும் என மற்ற மொழி ரசிகர்கள் நினைத்தது படத்திற்கு அந்தந்த மொழிகளில் மைனஸ் ஆகிவிட்டது.