15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு |
தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு திரைப்படம் முதன் முதலில் ரூ.500 கோடியைத் தொடப் போகிறது என்பது ஒரு சரித்திரம். அந்த சாதனையை சரித்திரப் படமான 'பொன்னியின் செல்வன்' படம் அடுத்த சில நாட்களில் நிகழ்த்த உள்ளது. விரைவில் தயாரிப்பு நிறுவனமே படம் 500 கோடியைக் கடந்தது என்ற அறிவிப்பை வெளியிடலாம்.
கடந்த வாரம் 450 கோடி வசூலைக் கடந்ததாக அறிவித்திருந்தார்கள். அதற்குப் பிறகு தீபாவளி விடுமுறை நாட்களிலும் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது. தீபாவளிக்கு வெளியான இரண்டு படங்களுடனும் போட்டி போட்டு 'பொன்னியின் செல்வன்' படமும் நல்ல வசூலைப் பெற்று திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்த வார நாட்களிலும் பல தியேட்டர்களில் நல்ல முன்பதிவு நடைபெற்றுள்ளது.
படம் வெளியான மற்ற மொழிகளில் அதிக வசூலைப் பெறாமல் தமிழில் மட்டுமே 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற மொழிகளிலும் இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருந்தால் 1000 கோடி வசூலைத் தொட்டிருக்கும். ஆனால், படத்தை தமிழ் மன்னனின் வாழ்க்கை வரலாற்றுப் படம், அதை ஏன் நாம் பார்க்க வேண்டும் என மற்ற மொழி ரசிகர்கள் நினைத்தது படத்திற்கு அந்தந்த மொழிகளில் மைனஸ் ஆகிவிட்டது.