மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியர் கடந்த ஏப்ரலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான நான்கே மாதங்களில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக கடந்த அக்., 9ல் விக்னேஷ் சிவன் அறிவித்தார். நான்கே மாதங்களில் குழந்தையா என பலரும் ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பிய நிலையில் அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற விபரம் தெரிய வந்தது.
அதேசமயம் இவர்கள் விதிமுறைகளை மீறி குழந்தை பெற்றதாக சர்ச்சையும் எழுந்தது. இதையடுத்து இதுபற்றி விசாரிக்க தமிழக சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவுத் திருமணம் செய்ததாகவும், கடந்த டிசம்பரிலேயே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற விண்ணப்பித்ததாகவும் தகவல் வெளியானது. தொடர்ந்து இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், வாடகைதாய் விவகாரம் தொடர்பாக இன்று சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கின்றனர். ஓரிரு நாளில் விசாரணை அறிக்கை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.