விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியர் கடந்த ஏப்ரலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான நான்கே மாதங்களில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக கடந்த அக்., 9ல் விக்னேஷ் சிவன் அறிவித்தார். நான்கே மாதங்களில் குழந்தையா என பலரும் ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பிய நிலையில் அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற விபரம் தெரிய வந்தது.
அதேசமயம் இவர்கள் விதிமுறைகளை மீறி குழந்தை பெற்றதாக சர்ச்சையும் எழுந்தது. இதையடுத்து இதுபற்றி விசாரிக்க தமிழக சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவுத் திருமணம் செய்ததாகவும், கடந்த டிசம்பரிலேயே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற விண்ணப்பித்ததாகவும் தகவல் வெளியானது. தொடர்ந்து இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், வாடகைதாய் விவகாரம் தொடர்பாக இன்று சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கின்றனர். ஓரிரு நாளில் விசாரணை அறிக்கை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.