மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நட்சத்திரம் நகர்கிறது படத்தைத் தொடர்ந்து ஏற்கனவே திட்டமிட்டபடி விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் இயக்குனர் பா.ரஞ்சித். இந்த படத்தின் கதை கேஜிஎப் பாணியில் கோலார் தங்க வயல் பின்னணியில் நடைபெறும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை நடிகை பார்வதி ஒப்பந்தமாகியுள்ளார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்ல இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பாவில் துவங்கி நடைபெற்று வருவதாகவும் இதில் கலந்துகொண்டு பார்வதி நடித்து வருகிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் படக்குழுவினர் இது பற்றி ஒரு சிறிய தகவலை கூட வெளியிடாமல் பாதுகாத்து வருகின்றனர். இதற்கு முன்னதாக இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்றும், அதன்பிறகு இந்தப்படத்தின் படப்பிடிப்பு தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டதால் இந்த படத்தில் பணியாற்ற இயலவில்லை என்று அவர் ஒதுங்கிக் கொண்டார் என்றும், அவருக்கு பதில் மாளவிகா மோகனன் நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது..