எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 30ம் தேதி வெளிவந்த சரித்திரப் படம் 'பொன்னியின் செல்வன்'. தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி இப்படம் வெளியானாலும் தமிழகத்தில் மட்டும் ரூ.200 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனை படைத்தது. உலக அளவில் படத்தின் வசூல் ரூ.450 கோடியைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் இன்று(அக்., 19) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டப்பிங் ஆன மற்ற மொழிகளில் பெரிய அளவில் இப்படம் வசூலிக்கவில்லை. இதர மாநிலங்களில் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் மட்டும் நல்ல வசூலைக் கொடுத்தது. ஆந்திரா, தெலங்கானா என தெலுங்கு பேசும் மாநிலங்களிலும், வட இந்திய மாநிலங்களிலும் இப்படம் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற முடியாமல் போனது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மண்ணின் பெரும் பகுதியை ஆண்ட சோழப் பேரரசின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள அவர்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. ராஜராஜசோழனின் பெருமைகள் என்னென்ன என படக்குழுவினர் வட இந்திய மாநிலங்களில் நிறையவே பேசினார்கள். இருப்பினும் எதிர்பார்த்ததை விடவும் குறைவான வசூலே கிடைத்தது. அங்கெல்லாம் இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருந்தால் ஆயிரம் கோடி வசூலையும் கடந்திருக்கும்.
நாளையுடன் 'பொன்னியின் செல்வன்' படத்தின் பெரும்பான்மையான தியேட்டர் ஓட்டம் முடிவுக்கு வருகிறது. நாளை மறுதினம் அக்டோபர் 21ம் தேதி 'சர்தார், பிரின்ஸ்' ஆகிய படங்கள் திரைக்கு வருகிறது. எனவே, அதற்குப் பின் குறைவான தியேட்டர்களில்தான் இப்படம் ஓட வேண்டிய சூழ்நிலை. எனவே, ரூ.500 கோடி வசூலைத் தொடுமா என்பது கொஞ்சம் சந்தேகமாகவே உள்ளது.