இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு ஜனவரியில் பொங்கல் தினத்தன்று திரைக்கு வருவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் தற்போது அஜித் நடித்துள்ள துணிவு படமும் பொங்கலுக்கு திரைக்கு வரப்போவதாக செய்திகள் வெளியானபோதும் இதுவரை அந்த செய்தியை தயாரிப்பாளர் போனி கபூர் உறுதிப்படுத்தவில்லை.
இந்த நேரத்தில் தற்போது திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் அது குறித்து ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். அதில் அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளியாகயிருக்கும் தகவல் உண்மைதான். இதில் அஜித்தின் துணிவு படம் ஜனவரி மாதம் 12ஆம் தேதியும் , விஜய்யின் வாரிசு படம் ஜனவரி 13ஆம் தேதியும் வெளியாக இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். அதோடு இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானபோதும் இரண்டு படங்களுக்குமே சமமான அளவு திரையரங்கங்கள் ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அந்த வகையில் கடைசியாக விஜய்யின் ஜில்லாவும், அஜித்தின் வீரமும் 2014 ஆம் ஆண்டு ஒரே நாளில் மோதிய நிலையில் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வாரிசு, துணிவு படங்கள் நேருக்கு நேர் மோதுகின்றன.