புதுப்பட டிரைலர் போல வெளியான 'கேப்டன் பிரபாகரன்' டிரைலர் | சூரி கிராமத்திற்குச் சென்று அன்பில் நெகிழ்ந்த ஐஸ்வர்ய லெட்சுமி | நாகார்ஜுனா - ராம் கோபால் வர்மாவின் 'சிவா' ரீ-ரிலீஸ் | சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் |
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, அதன் பிறகு கதாநாயகியாக தென்னிந்திய சினிமாவில் ஒரு மிகப்பெரிய ரவுண்டு வந்தார். அதோடு திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் மீனா சமீபத்தில் தனது கணவரை இழந்தா். அதிலிருந்து மெல்ல மீண்டு வருகிறார் மீனா. இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை பகிர்ந்து ஒரு பதிவு போட்டுள்ளார் மீனா. அதில், பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்த வாய்ப்பு தற்போது ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்துள்ளது. இது எனக்கு பொறாமையாக உள்ளது. இப்படி நான் பொறாமை கொள்வது இதுவே முதல் முறை. பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.