மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்கள் பலரும் பலவிதமாக இருப்பார்கள். இப்போதெல்லாம் தங்கள் அபிமான நடிகர்கள், நடிகைகளுடன் செல்பி எடுக்க வேண்டும் என்பதுதான் பல ரசிகர்கள் ஆசையாக இருக்கிறது. அந்தக் காலத்தில் எல்லாம் ஆட்டோகிராப் தான் கேட்டு வாங்குவார்கள்.
ஆனால், ராஷ்மிகாவின் அதி தீவிர இளம் ரசிகர்கள் ஒருவர் இரண்டையும் செய்திருக்கிறார், கொஞ்சம் ஓவராக. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகாவிடம் ஒரு இளம் வாலிபர் செல்பி எடுக்க வேண்டுமெனக் கேட்க மறுக்காமல் அந்த அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார் ராஷ்மிகா. அடுத்ததாக தனது மார்பில் ராஷ்மிகாவின் ஆட்டோகிராப் வேண்டுமென்று அவர் கேட்டார். முதலில் அதிர்ச்சியடைந்த ராஷ்மிகா பின்னர் அந்த இளைஞர் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் தனது ஆட்டோகிராபை பதிவிட்டார்.
அதை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த புகைப்படக் கலைஞர்கள் அது பற்றி கேட்டதற்கு 'சோ க்யூட்' என சிரித்துக் கொண்டே சென்றார் ராஷ்மிகா.