திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படம் நாளை மறுநாள் செப்டம்பர் 30ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்திற்காக படக்குழுவினர் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்தனர். இந்திய அளவில் தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது 'பொன்னியின் செல்வன்'.
இந்தப் படத்திற்கு அடுத்து தெலுங்கிலிருந்து 'ஷாகுந்தலம்' என்ற சரித்திரப் படம் நவம்பர் 4ம் தேதி வெளியாக உள்ளது. தெலுங்கில் சில பல வெற்றிப் படங்களைக் கொடுத்த குணசேகர் இயக்கியிருக்கும் இப்படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்திலும், மலையாள நடிகர் தேவ் மோகன் துஷ்யந்தன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள்.
இப்படத்திற்கான புரமோஷன் சுற்றுப் பயணத்தை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களிலும், பொது நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார் சமந்தா. தற்போது இந்தப் படத்திற்காக சமூக வலைத்தளங்களில் தனது பதிவுகளை பதிவிட ஆரம்பித்துள்ளார். புரமோஷன் சுற்றுப் பயணத்திலும் அவர் கலந்து கொள்ள உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.