நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ‛கேஜிஎப்' நாயகி | 100 கோடி கொடுத்தாலும் சஞ்சய் லீலா பன்சாலியுடன் பணியாற்ற மாட்டேன் : இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார் | தொடர்ந்து 'டார்கெட்' செய்யப்படும் பிரியங்கா மோகன் | 25 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 1 ரூபாய் அட்வான்ஸ் | சகலகலா வல்லவன் ‛ஹேப்பி நியூ இயர்' பாடலை படமாக்கிய மூத்த ஒளிப்பதிவாளர் பாபு காலமானார் | டிச., 25ல் சிறை ரிலீஸ் : உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட விக்ரம் பிரபு படம் | இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு |
துணை நடிகர் மகாகாந்தி என்பவர் விஜய்சேதுபதி மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். பெங்களூரு விமான நிலையத்தில் விஜய்சேதுபதி தன்னை ஜாதி பெயர் சொல்லி திட்டியதாகவும், ஆட்களை வைத்து தாக்கியதாகவும் தெரிவித்திருந்ததோடு அதற்கான வீடியோ ஆதாரத்தையும் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இவ்விவகாரம் குறித்து நடிகர் விஜய் சேதுபதிக்குச் சம்மன் அனுப்பியது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி விஜய் சேதுபதி சார்பில் சென்னை உயர்நீதி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பெங்களூருவில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. வழக்கை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரிக்கலாம் என உத்தரவிட்டது.
இந்நிலையில் தன் மீதான அவதூறு வழக்கு விசாரணையை தொடரலாம் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் விஜய்சேதுபதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.