கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
ஒரு காலத்தில் நடிகைகள் திரைப்படங்களில் அணியும் சேலைகள், பிளவுசுகள், நகைகள் வெளிச்சந்தையில் பிரபலமாகும். சரோஜாதேவி அணிந்த சேலைகள் சரோஜா சேலைகள் என்றே விற்கப்பட்டது, அதன்பிறகு நதியா கம்மல், நதியா வளையல் பிரபலமானது, சின்னத்திரையின் வளர்ச்சிக்கு பிறகு குஷ்பு ஜாக்கெட் பிரபலமானது. அந்த வரிசையில் தற்போது வருகிறது பொன்னியின் செல்வனின் சோழா நகைகள்.
பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்திருக்கும் த்ரிஷா, நந்தினியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நிறைய நகைகள் அணிந்து நடித்துள்ளனர். அரச குடும்பத்தை சேர்ந்த பெண்கள் நிறைய நகைகள் அணிந்து கொள்வது அன்றைய வழக்கமாக இருந்ததால் படத்திலும் அந்த காட்சிகள் இடம்பெறுகிறது. இருவருமே சுமார் 2 கிலோ நகைகள் அணிந்து நடித்திருக்கிறார்கள்.
இந்த நகைகள், சோழர் காலத்தில் இருந்த நகைகள் குறித்து கல்வெட்டிலும், சிற்பங்களிலும் ஆய்வு செய்து நிஜமான நகை கலைஞர்கள் உருவாக்கியவை, ஒரு சில நகைகள் தங்கத்திலும், ஒரு சில நகைகள் ஐம்பொன்னிலும், மற்ற நகைகள் கவரிங் நகை முறையிலும் செய்யப்பட்டவை.
தற்போது இந்த நகைகளின் பாணியில் தங்க நகைகளை விற்க நகைக்கடைகள் தீவிரம் காட்டுகிறது. இந்தியா முழுக்க பரவியிருக்கும் முன்னணி நகை கடை நிறுவனம் ஒன்று 'தி சோழாக் என்ற பெயரில் இதனை தொடங்கி இருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தில் பயன்படுத்தப்பட்ட நகைகளை ஏலம் விட படத் தயாரிப்பு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் புடவைகள் ஏற்கெனவே விற்பனைக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.