சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் |
ஒரு காலத்தில் நடிகைகள் திரைப்படங்களில் அணியும் சேலைகள், பிளவுசுகள், நகைகள் வெளிச்சந்தையில் பிரபலமாகும். சரோஜாதேவி அணிந்த சேலைகள் சரோஜா சேலைகள் என்றே விற்கப்பட்டது, அதன்பிறகு நதியா கம்மல், நதியா வளையல் பிரபலமானது, சின்னத்திரையின் வளர்ச்சிக்கு பிறகு குஷ்பு ஜாக்கெட் பிரபலமானது. அந்த வரிசையில் தற்போது வருகிறது பொன்னியின் செல்வனின் சோழா நகைகள்.
பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்திருக்கும் த்ரிஷா, நந்தினியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நிறைய நகைகள் அணிந்து நடித்துள்ளனர். அரச குடும்பத்தை சேர்ந்த பெண்கள் நிறைய நகைகள் அணிந்து கொள்வது அன்றைய வழக்கமாக இருந்ததால் படத்திலும் அந்த காட்சிகள் இடம்பெறுகிறது. இருவருமே சுமார் 2 கிலோ நகைகள் அணிந்து நடித்திருக்கிறார்கள்.
இந்த நகைகள், சோழர் காலத்தில் இருந்த நகைகள் குறித்து கல்வெட்டிலும், சிற்பங்களிலும் ஆய்வு செய்து நிஜமான நகை கலைஞர்கள் உருவாக்கியவை, ஒரு சில நகைகள் தங்கத்திலும், ஒரு சில நகைகள் ஐம்பொன்னிலும், மற்ற நகைகள் கவரிங் நகை முறையிலும் செய்யப்பட்டவை.
தற்போது இந்த நகைகளின் பாணியில் தங்க நகைகளை விற்க நகைக்கடைகள் தீவிரம் காட்டுகிறது. இந்தியா முழுக்க பரவியிருக்கும் முன்னணி நகை கடை நிறுவனம் ஒன்று 'தி சோழாக் என்ற பெயரில் இதனை தொடங்கி இருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தில் பயன்படுத்தப்பட்ட நகைகளை ஏலம் விட படத் தயாரிப்பு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் புடவைகள் ஏற்கெனவே விற்பனைக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.