சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
ஹாலிவுட் சினிமாவை இந்தியா நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. அவர் இயக்கிய பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்கள் உலக அளவில் வெற்றி பெற்று ஆயிரம் கோடிக்கு மேல் வசூலையும் குவித்தது. அடுத்து அவர் ஹாலிவுட் படம் இயக்க வாய்ப்பு வந்தபோதும் இந்திய படங்களை ஹாலிவுட்டுக்-கு கொண்டு செல்வதே என் இலக்கு என அறிவித்து தற்போது மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். அடுத்து தனது கனவு படைப்பான மகாபாரத்தை 3 பாகங்களாக இயக்க இருக்கிறார்.
இந்த நிலையில் ராஜமவுலியுடன் ஹாலிவுட் நிறுவனம் ஒன்று கைகோர்த்திருக்கிறது. கிரியேட்டிவ் ஆர்ட்டிஸ் ஏஜென்சி (சிஏஏ) என்ற நிறுவனம் ஹாலிவுட் படங்களை உலகம் முழுக்க சந்தைப்படுத்தும் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனம் ராஜமவுலியுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி இனி ராஜமவுலி இயக்கும் படங்களை ஹாலிவுட் உள்ளிட்ட உலக சந்தைப்படுத்தும் பணியை இந்த நிறுவனம் செய்ய இருக்கிறது. மகேஷ் பாபு நடக்கும் படத்தில் இருந்து இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வருகிறது.