ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தற்போது சுராஜ் இயக்கி உள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ள வடிவேலு, அதையடுத்து உதயநிதி நடித்துள்ள மாமன்னன், பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுக-2 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்ற வடிவேலு, மீடியாக்களை சந்தித்துள்ளார்.
அப்போது, தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஹீரோவாகவும், மாமன்னனில் குணச்சித்திர வேடத்திலும், சந்திரமுகி-2வில் காமெடி வேடத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் காமெடிகள் இன்னும் அதிகமாக இருக்கும். அதோடு, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் பின்னணியும் பாடியிருக்கிறேன். அந்த பாடல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெரும் என்று தெரிவித்திருக்கும் வடிவேலு, ஏற்கனவே என்னுடன் நடித்த நடிகர்களுக்கு ஏற்ற காமெடி டிராக் தற்போது இல்லாததால் மீண்டும் அவர்களுடன் சேர்ந்து நடிக்க இயலவில்லை. அதோடு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணிக்கு கண்டிப்பாக என்னால் இயன்ற உதவி செய்வேன் என்றும் வடிவேலு தெரிவித்திருக்கிறார்.