ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
தமிழ் சினிமாவில் நீண்ட நாளுக்கு பிறகு ஒரு வரலாற்றுப்படமாக வெளியாக இருக்கிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். அமரர் கல்கி எழுதிய நாவலான பொன்னியின் செல்வனை இரண்டு வருடங்களாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். இதன் முதல் பாகம் வரும் செப்.,30ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம்ரவியும், ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரமும், வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தியும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் விக்ரம் நடித்துள்ள ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் பற்றி நடிகர் பிரசன்னா கூறும்போது, “தான் சினிமாவில் நடிகனாக நுழைந்த காலத்தில் இருந்தே இப்படி குதிரையில் சவாரி செய்யும் ஒரு வீரனாக நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்து வருகிறது. இந்த படத்தில் விக்ரமின் தோற்றத்தை பார்த்ததும் அதில் நான் என்னையே பார்த்துக்கொண்டேன். ஏதோ ஒரு நாளில் என் விருப்பம் நிறைவேறும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார் பிரசன்னா. இதற்கு பதிலளித்த நடிகர் விக்ரம், “எனக்கு தெரியும்.. நிச்சயமாக விரைவில் ஒரு நாள் உன் கனவு நிறைவேற இருக்கின்றது” என்று ஊக்கம் அளித்துள்ளார்.