புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்து அதன் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். அதைத்தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர், தனுஷ் உடன் மாறன் என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார் மாளவிகா மோகனன். அதற்கு முன்னதாக கடந்த 2013ல் மலையாளத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பட்டம் போலே என்கிற படத்தில் அறிமுகமான மாளவிகா அதன்பிறகு இரண்டு மலையாள படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.
கடைசியாக 2017 ல் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான தி கிரேட் பாதர் படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மாளவிகா மோகனன். இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்கிறார் மாளவிகா. இந்த படத்தின் துவக்க விழா பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. கதாநாயகன் என பெரிய ஹீரோ யாரும் இந்த படத்தில் இல்லாத நிலையில் தண்ணீர் மாத்தன் தினங்கள் படம் மூலம் கவனம் ஈர்த்த இளம் நடிகர் மேத்யூ தாமஸ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில் ஹைலைட் என்னவென்றால் கேரள சினிமாவில் முக்கியமான எழுத்தாளர்களான இந்துகோபன் மற்றும் ஆடுஜீவிதம் நாவலை எழுதிய பென்யமின் இருவரும் இணைந்து இந்த படத்திற்கு கதை எழுதி உள்ளனர். ஆல்வின் ஹென்றி இயக்குகிறார். இளம் வயதினர் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை வைத்து இந்த படம் உருவாகிறது.