இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் |
காதல் தோல்வி காரணமாக நடிகை தீபா என்பவர் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவில் துணை நடிகையாக சில படங்களில் நடித்தவர் பவுலின் ஜெஸிகா எனும் தீபா. சமீபத்தில் வெளியான வாய்தா படத்தில் நாயகியாக நடித்தார். சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
போலீசார் மேற்கொண்ட முற்கட்ட விசாரணையில் தீபா ஒருவரை காதலித்து வந்ததாகவும், அந்த காதல் கைகூடாததால் தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே சம்பந்தப்பட்ட அந்த நபர் ஒரு தயாரிப்பாளர் என்று கூறப்படுகிறது. மேலும் இறப்பதற்கு முன் தீபா கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.
அதில், ‛‛தான் ஒருவரை உயிருக்கு காதலித்ததாகவும், அந்த காதல் கைகூடவில்லை. அதனால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்வதாகவும், தனது இறப்பிற்கு யாரும் காரணமில்லை'' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளாராம்.
நடிகை தீபா பவுலின் தற்கொலை சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.