விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
காதல் தோல்வி காரணமாக நடிகை தீபா என்பவர் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவில் துணை நடிகையாக சில படங்களில் நடித்தவர் பவுலின் ஜெஸிகா எனும் தீபா. சமீபத்தில் வெளியான வாய்தா படத்தில் நாயகியாக நடித்தார். சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
போலீசார் மேற்கொண்ட முற்கட்ட விசாரணையில் தீபா ஒருவரை காதலித்து வந்ததாகவும், அந்த காதல் கைகூடாததால் தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே சம்பந்தப்பட்ட அந்த நபர் ஒரு தயாரிப்பாளர் என்று கூறப்படுகிறது. மேலும் இறப்பதற்கு முன் தீபா கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.
அதில், ‛‛தான் ஒருவரை உயிருக்கு காதலித்ததாகவும், அந்த காதல் கைகூடவில்லை. அதனால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்வதாகவும், தனது இறப்பிற்கு யாரும் காரணமில்லை'' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளாராம்.
நடிகை தீபா பவுலின் தற்கொலை சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.