ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய்யின் தாயாரும் பிரபல சீனியர் இயக்குனரான எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியுமான ஷோபா சந்திரசேகர் தற்போது முதன்முறையாக டுவிட்டர் பக்கத்தில் தனது புதிய கணக்கை துவங்கியுள்ளார். அதில் “டுவிட்டரில் இணைந்ததில் மகிழ்ச்சி.. முதல் படமாக எனது அன்பு மகன் விஜய் உடன் இருக்கும் புகைப்படம்” என்று கூறி விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் ஷோபா சந்திரசேகர்.
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமான ஷோபா சந்திரசேகர் இயக்குனராகவும் மாறி சில படங்களை இயக்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் விஜய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட சமயத்தில் அதை பக்குவமாக கையாண்ட ஷோபா சந்திரசேகர், இப்போது டுவிட்டரில் நுழைந்திருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் எழுப்பி உள்ளது.