புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பூரி ஜெகன்னாத், விஜய் தேவரகொண்டா கூட்டணியில் வெளிவந்த 'லைகர்' படம் அனைத்து மொழிகளிலும் படுதோல்வியைத் தழுவியது. வெளியீட்டிற்கு முன்பாக பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட படம். விஜய், அனன்யா இருவரும் ஊர் ஊராகச் சென்று படத்தைப் பற்றி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தார்கள். ஆனால், படம் வெளியான பின்பு கதையே இல்லாத காரணத்தால் தோல்வியைத் தழுவியது.
இப்படத்தின் தோல்வி பூரி ஜெகன்னாத், விஜய் கூட்டணியில் அடுத்து உருவாகி வரும் 'ஜனகனமண' படத்தையும் பாதித்துள்ளது. இப்படத்தை 'லைகர்' வெளியீட்டிற்கு முன்பாகவே ஆரம்பித்தார்கள். கதாநாயகியாக 'பீஸ்ட்' நாயகி பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. அடுத்த வருடம் ஆகஸ்ட் 3ம் தேதி படம் வெளியீடு என்று கூட அறிவித்தார்கள்.
இந்நிலையில் பூரி ஜெகன்னாத்தும், விஜய் தேவரகொண்டாவும் கலந்து பேசி இப்படத்தை டிராப் செய்யும் முடிவுக்கு வந்துள்ளார்கள் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தற்காலிக டிராப்பா, நிரந்தர டிராப்பா என்பது பின்னர் தெரிய வரும்.