‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

தமிழ் சினிமாவில் அடுத்த பிரம்மாண்டப் படைப்பாக உருவாகி உள்ள படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த மாதம் செப்டம்பர் 30ம் தேதி இப்படம் தமிழ் தவிர, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.
அக்டோபர் மாத முதல் வாரத்தில் விஜய தசமி, ஆயுத பூஜை ஆகிய பண்டிகை நாட்கள் வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு அந்த ஒரு வாரத்தில் விடுமுறை உண்டு. எனவேதான் விடுமுறையைக் கருத்தில் கொண்டு படத்தை செப்டம்பர் 30ம் தேதி வெளியிடுவதாக எப்போதோ அறிவித்தார்கள்.
இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்திற்குப் போட்டியாக செல்வராகவன் இயக்கியுள்ள 'நானே வருவேன்' படம் வெளியாகும் எனத் தெரிகிறது. மேலும், ஹிந்தியிலும் 'பொன்னியின் செல்வன்' படத்திற்குப் போட்டியாக 'விக்ரம் வேதா' படம் வெளிவர உள்ளது.
தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' போன்ற பிரம்மாண்டப் படங்களும், கன்னடத்தில் 'கேஜிஎப் 2' படமும் வெளிவந்த போது அந்தப் படங்கள் இந்திய அளவில், உலக அளவில் வெற்றி பெற்றால் தங்கள் மொழி சினிமாவுக்குப் பெருமை என தெலுங்கு, கன்னடத் திரையுலகினர் வேறு படங்களை வெளியிடுவதை தள்ளி வைத்தனர்.
ஆனால், தமிழ் நாவல் உலகில் பெரிய சாதனையைப் படைத்த 'பொன்னியின் செல்வன்' நாவல், மணிரத்னம் இயக்கத்தில் பல நடிகர்கள், நடிகைகள் நடிக்க வெளிவந்து பெரும் வெற்றியும், வரவேற்பும் பெற்றால் அது தமிழ் சினிமாவுக்குப் பெருமையான ஒன்றாகவே இருக்கும். எனவே, 'நானே வருவேன்' படத்தைத் தள்ளி வைப்பதுதான் சரியாக இருக்கும் என தமிழ்த் திரையுலகில் உள்ள பலர் கருதுகிறார்கள்.