ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் |
நடிகர் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அந்தகன் என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. இதுதவிர மேலும் சில படங்களில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இலங்கையை சேர்ந்த பெண்ணான குமுதினி என்பவர் தற்போது சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த குமுதினி, பாண்டி பஜார் காவல் நிலையத்தில் நடிகர் பிரசாத் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நடிகர் பிரசாந்த், தன்னிடம் 10 லட்சம் மோசடி செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் பிரசாந்த் தரப்பில் இருந்து குமுதினிக்கு மூன்று முறை பிரச்சனை செய்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த புகார்கள் குறித்து காவல் துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிரசாந்த்தும் அந்த பெண் மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். அதில் தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக தெரிவித்துள்ளார். இதனிடையே இரண்டு புகார்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.