ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
நடிகர் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அந்தகன் என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. இதுதவிர மேலும் சில படங்களில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இலங்கையை சேர்ந்த பெண்ணான குமுதினி என்பவர் தற்போது சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த குமுதினி, பாண்டி பஜார் காவல் நிலையத்தில் நடிகர் பிரசாத் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நடிகர் பிரசாந்த், தன்னிடம் 10 லட்சம் மோசடி செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் பிரசாந்த் தரப்பில் இருந்து குமுதினிக்கு மூன்று முறை பிரச்சனை செய்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த புகார்கள் குறித்து காவல் துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிரசாந்த்தும் அந்த பெண் மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். அதில் தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக தெரிவித்துள்ளார். இதனிடையே இரண்டு புகார்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.