அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் 2014ம் ஆண்டு நடிகர் கார்த்தி, சமந்தாவை நடிப்பில் 'எண்ணி ஏழு நாள்' என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்டு பிவிபி கேபிட்டல் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் பெற்றிருந்தது. ஆனால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் திட்டமிட்டபடி படத்தை தொடங்கவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இதனால் பிவிபி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்போது லிங்குசாமி கொடுத்த காசோலைகள் பணம் இன்றி திரும்பி வந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்தோடு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. இதை தொடர்ந்து நேற்று லிங்குசாமி கோர்ட்டில் அபராத தொகையை செலுத்தினார். 6 மாத சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்.