''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
தற்போது பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அதோடு ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து சுதா இயக்கிவரும் சூரரை போற்று படத்தின் ரீமேக்கிலும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இப்படியான நிலையில் அடுத்தபடியாக சூர்யா, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கப் போகிறாரா? இல்லை சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க போகிறாரா? என்கிற கேள்விகள் எழுந்து வந்த நிலையில், தற்போது சிறுத்தை சிவா இயக்கும் தனது 42வது படத்தில் சூர்யா நடிப்பது உறுதியாகி உள்ளது.
இன்று (ஆக.,21) காலை சென்னையில் சூர்யா-42வது படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத்தில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.