இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஜெர்ரி என்ற படத்தில் அறிமுகமான காமெடி நடிகர் சதீஷ், அதன் பிறகு மதராசபட்டினம், மான் கராத்தே, வேலாயுதம், அண்ணாத்த, ரெமோ என பல படங்களில் நடித்தார். இந்த நிலையில் நாய் சேகர் என்ற படத்தில் அவர் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தில் சதீஷ் நடித்துக் கொண்டிருக்கும் போது, சுராஜ் இயக்கும் படத்தில் மீண்டும் ஹீரோவாக ரீஎன்ட்ரி கொடுக்க தயாரானார் வடிவேலு. அப்போது நாய் சேகர் என்பது வடிவேலு காமெடியனாக நடித்த கேரக்டர் பெயர் என்பதால் நாய் சேகர் என்ற டைட்டிலை விட்டுத்தருமாறு சதீஷ் படக்குழுவிடம் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் இப்படத்திற்கு நாய் சேகர் என்ற டைட்டில் வைப்பதுதான் கதைப்படி பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி அதை விட்டுக் கொடுக்க சதீஷ் பட குழு மறுத்துவிட்டது.
அதையடுத்து திரைக்கு வந்த நாய் சேகர் படம் ரசிகர்களின் ஆதரவு பெற்று ஓரளவு வெற்றி பெற்றது. இந்த நிலையில் நாய் சேகர் படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக ஹீரோ என்பதற்கான விருதினை ஒரு தனியார் நிறுவனம் சதீஷ்க்கு வழங்கி இருக்கிறது. அந்த விருதுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் அவர்கள் வெளியிடு இருக்கிறார். கூடவே அந்த புகைப்படத்தில் அவரது மகளும் இடம் பெற்றுள்ளார். மேலும் இந்த விருது தனக்கு கிடைப்பதற்கு காரணமாக இருந்த நாய் சேகர் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் சதீஷ்.