சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
ஜெர்ரி என்ற படத்தில் அறிமுகமான காமெடி நடிகர் சதீஷ், அதன் பிறகு மதராசபட்டினம், மான் கராத்தே, வேலாயுதம், அண்ணாத்த, ரெமோ என பல படங்களில் நடித்தார். இந்த நிலையில் நாய் சேகர் என்ற படத்தில் அவர் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தில் சதீஷ் நடித்துக் கொண்டிருக்கும் போது, சுராஜ் இயக்கும் படத்தில் மீண்டும் ஹீரோவாக ரீஎன்ட்ரி கொடுக்க தயாரானார் வடிவேலு. அப்போது நாய் சேகர் என்பது வடிவேலு காமெடியனாக நடித்த கேரக்டர் பெயர் என்பதால் நாய் சேகர் என்ற டைட்டிலை விட்டுத்தருமாறு சதீஷ் படக்குழுவிடம் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் இப்படத்திற்கு நாய் சேகர் என்ற டைட்டில் வைப்பதுதான் கதைப்படி பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி அதை விட்டுக் கொடுக்க சதீஷ் பட குழு மறுத்துவிட்டது.
அதையடுத்து திரைக்கு வந்த நாய் சேகர் படம் ரசிகர்களின் ஆதரவு பெற்று ஓரளவு வெற்றி பெற்றது. இந்த நிலையில் நாய் சேகர் படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக ஹீரோ என்பதற்கான விருதினை ஒரு தனியார் நிறுவனம் சதீஷ்க்கு வழங்கி இருக்கிறது. அந்த விருதுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் அவர்கள் வெளியிடு இருக்கிறார். கூடவே அந்த புகைப்படத்தில் அவரது மகளும் இடம் பெற்றுள்ளார். மேலும் இந்த விருது தனக்கு கிடைப்பதற்கு காரணமாக இருந்த நாய் சேகர் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் சதீஷ்.