பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் |
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக இருப்பவர் சமந்தா. தற்போது தமிழில் விஜய்யின் 67வது படத்தில் நடிக்க அவருடன் பேசி வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் தெலுங்கில் 'சகுந்தலை, யசோதா,' என இரண்டு படங்கள் அவரது நடிப்பில் இந்த வருடத்தில் வெளியாக வாய்ப்புள்ளது.
கடைசியாக ஒரு மாதத்திற்கு முன்பாகத்தான் தனிப்பட்ட பதிவுகளைப் பதிவிட்டார். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு விளம்பரப் பதிவை மட்டும் பதிவிட்டிருந்தார். அடிக்கடி விதவிதமான பதிவுகளை, புகைப்படங்களுடன் பதிவிட்டு ஆக்டிவ்வாக இருந்தவர் திடீரென ஒதுங்கியது பலரை ஆச்சரியப்படுத்தியது.
நாக சைதன்யா, சோபியா துலிபல்லா இடையிலான எழுந்த காதல் கிசுகிசுவை சமந்தா தரப்புதான் பரப்பி விட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அதனால், சமந்தா இப்படி இடைவெளி விட்டிருக்கலாம் என்கிறார்கள்.
அந்த இடைவெளிக்குப் பிறகு நேற்று இன்ஸ்டா ஸ்டோரியில் 'காபி வித் கரன்' நிகழ்ச்சி பற்றிய வீடியோ ஒன்றையும், அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாருடனும் ஒரு போட்டோவைப் பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சி வியாழக்கிழமையன்று இரவு 7 மணிக்கு ஓடிடி தளத்தில் முதல் முறை ஒளிபரப்பாக உள்ளது.