மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகர் தனுஷ், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினி ஆகிய இருவரும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 18 ஆண்டுகளுக்கு பிறகு தாங்கள் பிரிந்து வாழப் போவதாக அறிவித்தனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளார்கள். பிரிந்து வாழப் போவதாக அறிவித்தபோதும் மகன்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களை இணைந்து வாழச் சொல்லி குடும்பத்தினர் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் ஐஸ்வர்யா, ‛பயணி' என்ற வீடியோ ஆல்பத்தை இயக்கியவர் அடுத்து தமிழ் மற்றும் ஹிந்தியில் படம் இயக்கப் போவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் நடித்துள்ள தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் பிரிமியர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது மகன்கள் இருவரையும் அமெரிக்கா அழைத்துச் சென்றிருந்தார் தனுஷ். அங்கு அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியானது.
இந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரும் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பி உள்ளார்கள். அதையடுத்து மகன்கள் இருவரையும் கட்டித்தழுவி வரவேற்றுள்ளார் ஐஸ்வர்யா. அதோடு, ‛‛சில நேரங்களில் உங்களுக்கு தேவையானது அவர்களின் அணைப்பு மட்டுமே'' என பதிவிட்டுள்ளார்.